புண்ணியம் என்ன செய்தனை கல்லேகண்ணியவாளன் கற்சிலை ஆனாய்எண்ணிலடங்கா இறைபணியாளன்தண்ணியவுளத்தான் தனியாய்வாளன்
ஏழிசை ஆய்ந்தான் மீனிசை ஆய்ந்தான்யாழிசை ஆய்ந்தான் யாழ்நூல் தந்தான்தாழிசை சொல்லும் மதங்கநூல் தந்தான்ஆழிசை ஆர்க்கும் காரை மூதூரான்
பல்வகைக் கட்டுரை நல்வகைக் கவிதைசொல்வகை யறிந்து சோராதியற்றியோன்பன்மொழிப் புலவோன் பார்புகழறிஞன்நல்வகை ஆசான் நாடேற்றும் அதிபன்.
உள்ளத்தூய்மைக்கு வெண்ணிறமல்லிகைகொள்ளையன்பில் கங்கையில் ஓலைபள்ளிகள் பாலனம் பண்ணியபுண்ணியன்உள்ளிப்பாரதியை உயர்த்தி மெச்சியோன்.
நீரலைக்காற்றே வாரும் விபுலனின்தோளைச் சேரும்நேரலை வானே நின்று விண்வழிப்பூவைத் தூவும்நீரலை மீனே வளைந்து வாழ்த்தியேகவிதை பாடுபேரலை விபுலானந்தன் பெருவிழாப்பாரீர் வாரீர்.
திருமதி வேதநாயகி குணநாயகம். களுதாவளை
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Post Comment
Δ